பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ், பெங்களூரு அசஞ்சர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் நபரையும் அவரது குடும்பத்தினர் ஆறு பேரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பும் அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அகமது தாரிக் பட் என்ற இந்த நபர் தமக்கும் குடும்பத்தினருக்கும் இந்திய பாஸ்போர்ட்டும், ஆதார் கார்டுகளும் இருப்பதாகவும், அவற்றை ஏற்காமல் வலுக்கட்டாயமாக தம்மை திருப்பி அனுப்ப முயற்சிப்பதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோழிக்கோடு ஐஐஎம்-ல் எம்பிஏ படித்துள்ள இவரது ஆவணங்களை பரிசோதிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், அவரையும் குடும்பத்தினரையும் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானுக்கு அனுப்ப தடை விதித்தனர்.