புதுச்சேரி மாநிலம் உழவர்கரையில் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 310 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு பங்குதந்தை ஜோசப் பால் தலைமையில் சிறப்பு திருப்பலி, கொடிக்கு சிறப்பு ஆராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து நடநுத கொடியேற்ற நிகழ்வில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து நாள்தோறும் காலையும் மாலையும் சிறப்பு திருப்பலிகளும், வரும் 11 ஆம் தேதி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனியும் நடைபெற உள்ளது.