மணிப்பூர் மாநிலம் சண்டேல் மாவட்டத்தில் மியான்மர் எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், கிளர்ச்சியாளர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். New Samtal கிராமத்தில் புதன்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து, இரு தரப்புக்கும் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.