தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் பிரிவு, அஜித் பவார் பிரிவுடன் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதை ஒட்டி மும்பையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், தேசியவாத காங்கிரசின் இரு பிரிவுகளையும் ஒன்றிணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.