பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களிலிருந்து இதுவரை 196 மாணவர்கள் தொடர்பு கொண்டதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் இருந்து தமிழக மாணவர்களை மீட்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது. அதன்படி பஞ்சாபில் இருந்து டெல்லி வழியாக தமிழகம் வந்த 15 மாணவர்களை வரவேற்ற அமைச்சர் நாசர், இதுவரை 51 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மாணவர்களையும் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.