ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து மூன்றாவது தடவையாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. அதன்படி வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியில் மேலும் 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டு, வட்டி விகிதம் ஆறில் இருந்து 5 புள்ளி 5 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காம் தேதி துவங்கிய ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழுவின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிர்வாக வளர்ச்சியை விரிவாக மதிப்பீடு செய்த பின் வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார். ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.