அயோத்தி ராமர் கோவிலில் முதல் மாடியில் ராமர் தர்பாரின் முதல் தங்கக் கதவு நிறுவப்பட உள்ள நிலையில் அதற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கதவுகள் தேக்கு மரத்தில் செய்யப்பட்டு, தங்கத் தகடுகளால் போர்த்தப்பட்டுள்ளன. இதில் ராமர் மன்னர் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். அவருடன் சீதா தேவி, ஹனுமான், பரதன், லட்சுமணன் மற்றும் சத்ருகன் ஆகியோரின் நான்கரை அடி உயர பளிங்கு சிலைகள் இடம்பெற உள்ள நிலையில் மே 23ம் தேதி பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடக்க உள்ளது. ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் ஜூன் 5 ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் கட்டுமானக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.