ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாத நிலைகளை தாக்குவதற்கு முன்னர் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், தாக்குதலுக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு தகவல் கொடுத்தது ஒரு குற்றம் என கூறியுள்ளார்.