ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய குண்டு வீச்சுகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை சென்றடைந்தார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார்.ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இரண்டாவது தடவையாக ராகுல் காந்தி காஷ்மீருக்கு சென்றுள்ளார். கடந்த முறை காஷ்மீருக்கு சென்ற அவர், நாட்டு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் ஒரு முயற்சியே பயங்கரவாத தாக்குதல் என கூறினார். பயங்கரவாத த்தை ஒழிக்க வேண்டுமானால் நாடு தழுவிய அளவில் ஒற்றுமை வளர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.