அமெரிக்க அதிபர் ஜோபைடனின் நினைவாற்றல் குறித்த தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு ராகுல் காந்தி பொது மன்னிப்பு கோர வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வெளிநாட்டு தலைவரை பற்றி கொச்சையான கருத்தை பகிர்வது எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு அழகல்ல எனவும், ராகுலின் கருத்தால் முதுமை மற்றும் நினைவாற்றல் குறித்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.