1984ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் புளூ ஸ்டார் தொடர்பாக சீக்கியர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, அந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். மேலும் தாம் இல்லாத சமயத்தில் காங்கிரஸ் இது போன்ற பல தவறுகளை இழைத்திருப்பதாகவும், அவ்வாறு வரலாற்றில் காங்கிரஸ் செய்த அனைத்து தவறுகளுக்கும் தாம் மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இரு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவரிடம் சீக்கியர் ஒருவர் ஆபரேஷன் புளூ ஸ்டார் குறித்து கேள்வி எழுப்பினார்.