75 ஆண்டுகளாக முக்கிய தேசிய கட்சிகள் கையில் எடுத்துள்ள இந்து-முஸ்லீம் பிரித்தாளும் கொள்கையே நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் என டெல்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் அமைப்பை துவக்கி வைத்து பேசிய அவர், டெல்லியில் பாஜக அரசு கல்வி முறையை நசுக்கி வருவதாக குற்றஞ்சாட்டினார்.இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் பாடங்களை பள்ளிகளில் பயிற்றுவித்து மக்களை காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் குழப்பத்தில் தள்ளுவதாகவும் கெஜ்ரிவால் கூறினார். மக்கள் பட்டினியாலும், கல்வி கிடைக்காமலும் அவதிப்படுவதாக தெரிவித்த அவர்,அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் இந்த கட்சிகள் 75 ஆண்டுகளாக அரசியல் செய்கின்றன என்றார்.