வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவை பிரதமர் மோடி நேரில் சந்திக்க உள்ளார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறும் வண்ணம் இந்திய எம்.பி.,க்கள் குழு 33 நாடுகளுக்குச் சென்றுள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக பல நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. இதனால் இந்திய எம்.பி.க்கள் குழுவை வரும் 9 அல்லது 10ம் தேதியில் பிரதமர் மோடி நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக கூறப்படுகிறது.