யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர் சேர்க்கப்பட்டு கேள்வி கேட்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. குடிமைப்பணிகளுக்காக மத்திய தேர்வாணையம் மூலம் நடைபெற்ற யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வில் பெரியார் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர் போடப்பட்டு கேள்வி கேட்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்?’ என கேள்வி கேட்கப்பட்டு அதற்கான நான்கு பதில்களில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், பாஸ்கர் ராவ் ஜாதவ், தினகர் ராவ் ஜவால்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், 1929இல் தனது சாதிப் பெயரே நீக்கினார் என்பது குறிப்பிடதக்கது.