இந்தியாவுடனான பதட்டத்திற்கு மத்தியில் 120 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஃபதா ஏவுகணையை பாகிஸ்தான் சோதனை செய்தது. எக்சர்சைஸ் இண்டஸ் என்ற இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டது. 120 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஃபதா, தரையிலிருந்து இலக்கை தாக்கும் ஏவுகணை என கூறப்படுகிறது. ஏற்கனவே 450 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் அப்தாலி ஏவுகணையை சோதித்த இரு தினங்களுக்கு பிறகு பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தி உள்ளது.