காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 12ஆவது நாளாக அத்துமீறி தாக்குதலை நடத்தியது. பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ராஜோரி, அக்னூர் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரவில் சிறிய ஆயுதங்களால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில் இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.