நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2010-ம் ஆண்டு ராகுல் மற்றும் சோனியா காந்திக்கு சொந்தமான யங் இந்தியா என்ற நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வாங்கியதில் 2 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை 2014-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணையை தொடங்கும் முன் வழக்கு சார்ந்தவர்களின் வாதங்களை பெற வேண்டியது அவசியம் என்று தெரிவித்த நீதிபதிகள், ராகுல், சோனியா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.