எல்லையோர பகுதியில் போதைப் பொருள் : ஜம்முகாஷ்மீர் எல்லைப் பகுதியில் டிரோன்கள் மூலம் போதைப்பொருள் பொட்டலங்கள் வீசப்பட்டது குறித்து பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இரவு நேரங்களில் டிரோன்கள் மூலம் போதைப் பொருள் பொட்டலங்கள் வீசிச் செல்வது குறித்து எல்லையோர மக்கள் பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 6.5 கிலோ கிராம் எடையுள்ள ஹெராயின் போதைப் பொருளின் மதிப்பு 40 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. சந்தேகத்திற்குரிய டிரோன்கள் பாகிஸ்தானை சேர்ந்தவையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். Related Link வங்கதேச பிரதமராக நாளை பதவியேற்கிறார் தாரிக் ரஹ்மான்