கர்னல் சோபியா குரேஷி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பா.ஜ.க. அமைச்சர் கன்வார் விஜய் ஷா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்னல் சோபியா குரேஷி குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த அம்மாநில உயர் நீதிமன்றம், உடனடியாக விஜய் ஷா மீது வழக்குப் பதிவு செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.