கர்நாடக மாநிலம், சிக்கபல்லாபூரில் குடும்ப தகராறு காரணமாக, இரண்டு பெண் குழந்தைகளுடன், தாய் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயண்ணா, கிடைத்த வேலைகளை செய்து வந்த நிலையில், மனைவி லாவண்யா அவரை நிலையான வேலைக்கு செல்லும்படி கூறியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை, 10 வயது மகள் நிஹாரிகா மற்றும் 6 வயது மகள் நேஹாவுடன் வீட்டை விட்டு வெளியேறிய லாவண்யா, ரங்கஸ்தலம் கிராமத்தில் உள்ள ஏரியில் குதித்துள்ளார்.