பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன் முறையாக ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ள பிரதமர் மோடி, வரும் ஆறாம் தேதி கத்ராவில் வந்தே பாரத் ரயிலை துவங்கி வைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப் பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றாலும் கத்ராவில் மோடியின் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தமது ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது செனாப் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தையும் மோடி திறந்து வைப்பார் என கூறப்படுகிறது. வரும் 9 ஆம் தேதி மோடி பிரதமராக பதவி ஏற்று 11 ஆண்டுகள் ஆவதை ஒட்டியும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிகிறது.