குஜராத்தில் 3.4 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனம் ((ISR)) தெரிவித்துள்ளது. பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள வாவ் அருகே கிழக்கு-வடகிழக்கில், சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவில் 4.9 கிலோ மீட்டர் ஆழத்தில், அதிகாலை 3:35 மணிக்கு நிலநடுக்கம் பதிவானதாகவும், சேதம் குறித்த தகவல்கள் தெரியவில்லை என ISR அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளில் குஜராத், 9 பெரிய நிலநடுக்கங்களை சந்தித்துள்ளதாகவும், குறிப்பாக 2001 ம் ஆண்டு கட்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.