உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட கட்டடத்தில் காயங்களுடன் கிடந்த 10 மாத கைக்குழந்தையை மீட்டு போலீசிடம் ஒப்படைத்த நடிகை திஷா பதானியின் சகோதரி குஷ்பூ பதானிக்கு பாராட்டுகள் குவிகின்றன. காலை நடைபயிற்சிக்கு சென்ற போது குழந்தையின் அழுகுரலை கேட்ட அவர், கட்டடத்தின் சுவர் ஏறிகுதித்து உள்ளே சென்று குழந்தையை காப்பாற்றினார்.