நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்ற இந்தூர் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் தேர்வு எழுதிய 21 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், இந்தூரை சேர்ந்த மாணவி ஒருவர், தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாக சரிவர தேர்வு எழுத முடியவில்லை என வழக்கு தொடர்ந்தார்.