இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மே 16-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளாா். அமெரிக்காவின் பரஸ்பர அதிக வரி விதிப்பைத் தவிா்க்க மத்திய அரசு முயற்சித்துவரும் நிலையில், அதற்கு இருதரப்பு, ஒப்பந்தம் மூலம் சுமுகத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.