Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 11:27 AM
By: Web Team

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லை வழியாக ஏராளமான எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
ரஜோரி மாவட்ட எல்லை வழியாக பெருமளவிலான ஆயுதங்களுடன் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் ஊடுவ முயற்சிப்பதாக உளவுத் துறை தகவல் அளித்த து. அதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பாகிஸ்தானை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவரை ராணுவத்தினர் பிடித்து விசாரித்தனர்.
அப்போது காம்பிர் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டது அம்பலமாகி அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
கைதான பாகிஸ்தான் சுற்றுலா வழிகாட்டியின் பெயர் முகம்மது ஆரிப் அகமது எனவும் இந்த நபர் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved