இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்காவின் பங்கு குறித்து பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் பதிலளிக்காமல் இருப்பது ஏன்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஜெய்ராம் ரமேஷ், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும், இது முதல் முறையாக நடப்பதாகவும், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதாகவும் தெரிவித்தவர், பிரதமர் மோடியும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் ஏன் பதிலளிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.