ஆபரேஷன் சிந்தூரை அடுத்து எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் மக்கள் ஒன்றுக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதேபோல் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் வார விடுமுறை மற்றும் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.