பஹல்காம் தாக்குதலின் பதில் நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ள நிலையில், இதே நிலை ஓராண்டுக்கு நீடித்தால் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் சுமார் 5 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான சேவை நிறுவனங்கள், பாகிஸ்தான் வான்பரப்பு மூடப்பட்டதன் தாக்கம் குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் முறையீடு செய்திருப்பதோடு, இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசின் உதவியையும் நாடியுள்ளன. சூழ்நிலையை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ள அமைச்சகம், இதற்கு தீர்வு காணும் வகையில் சாத்தியமான மாற்று வழிகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.