ராஜஸ்தான் மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்த தம்பதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோட்டா பகுதியை சேர்ந்த தீபக், கடன் வாங்கி ஆன்லைன் கேமிங்கில் விளையாடி தோல்வியடைந்த நிலையில், 5 லட்சம் ரூபாய் வரை கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், தற்கொலை செய்துக் கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை என சகோதரியிடம் புலம்பியுள்ளார். அவரின் சகோதரி சமாதானம் செய்தும் கடன் கழுத்தை நெரித்ததால் கணவன்-மனைவி ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.