ஆயிரத்து 500 கோடி ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழபக்கில் அரியானா காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ தரம் சிங் சோக்கர் என்பவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். டெல்லிக்கு தப்பிச் சென்று விடுதி ஒன்றில் மறைந்திருந்த இவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தீன் தயாள் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இவர் இந்த அளவுக்கு முறைகேடு நடத்தியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்துள்ளது. அவருடன் அவரது மகன்களான விகாஸ்,சிக்கந்தர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆயிரத்து 500 பேரிடம் இருந்து பணம் பெற்று அதை சட்டவிரோத பரிமாற்றத்திற்கு பயன்படுத்திய வழக்கில் சிக்கந்தர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். தரம் சிங் சோக்கர் இன்று குருகிராம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.