அடுத்த பத்து ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ஐம்பதினாயிரம் கோடி ரூபாய் கூடுதல் முதலீடுகளை செய்ய உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது. பசுமை சக்தி, சாலை மற்றும் நெடுஞ்சாலைகள், டிஜிட்டல் கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்டவற்றில் இந்த முதலீடு செய்யப்படும் என தெரிகிறது. வளரும் வடகிழக்கு என்ற மாநாட்டில் பேசிய அதானி குழும அதிபர் கவுதம் அதானி , வடகிழக்கு மாநிலங்களை வைத்து இந்தியாவின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என கூறினார்.மின்சக்தி உற்பத்தியில் பல புதுமைகள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்த அவர், வடகிழக்கு மாநிலத்தவருக்காக திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.