வீட்டு வாடகை, பண வீக்கம், கல்விச் செலவுகள் அதிகரித்து, நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், ஒரு சில முதலாளிகளுக்காக மட்டுமல்லாமல் அனைத்து இந்தியர்களுக்கும் கைகொடுக்கும் பொருளாதாரமே நமது தேவை என்று தெரிவித்துள்ளார்.