ஆபரேஷன் சிந்தூரில் முக்கிய பங்காற்றிய ராணுவ பெண் அதிகாரி சோபியா குரேஷியை பயங்கரவாதிகளின் சகோதரி என விஜய் ஷா கூறியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், அவரது மன்னிப்பை நிராகரித்த உச்சநீதிமன்றம் மூன்று பேர் கொண்ட விசாரணை குழுவை அமைக்க உத்தரவிட்டது. அதன் படி, ஐஜி பிரமோத் வர்மா, டிஐஜி கல்யாண் சக்கரவர்த்தி மற்றும் எஸ்பி. வாகினி சிங் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார்.