டெல்லியில் பிரதமர் மோடியை சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சந்தித்து பேசினார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார். அதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா - சீனா எல்லைப் பிரச்னைகள் குறித்து இருவரும் கலந்து ஆலோசித்தனர். இந்த நிலையில், எல்லையில் சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் பிரதமர் மோடியை வாங் யி சந்தித்து பேசினார்.