ஜாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியும் 2027 மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை கடந்த ஏப்ரலில் ஒப்புதல் அளித்தது. இந்த சூழலில், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு பணியும் 2027 மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது. மேலும், இதற்கான அரசாணை வரும் 16-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், பனிப்பொழிவுக்கு இலக்காகும் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் ஆகிய மாநிலங்களில் முதல்கட்டமாக 2026 அக்டோபர் 1-ஆம் தேதியே கணக்கெடுப்பு பணி தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.