வங்கி மோசடி வழக்கில் இங்கிலாந்து சிறையில் உள்ள தொழிலதிபர் நிரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார்.சி.பி.ஐ. அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகளாக லண்டன் வேண்ட்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.