பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவின் பேரில் லஷ்கர் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.