பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு வித்திட்ட இந்திய வீரர்களை பாராட்டி பாஜக ஆளும் மாநிலங்களில் தேசியக்கொடியுடன் பேரணி நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டு, ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இந்திய ராணுவ வீரர்களை பாராட்டி ராஞ்சி, சிம்லா, மகாராஷ்டிரா, புவனேஸ்வர், லக்னோ, டேராடூன் ஆகிய இடங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் முன்னிலையில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.