வாரணாசியில் இருந்து பெங்களூரு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என பயணி ஒருவர் கத்தியதால் பீதி ஏற்பட்டது. கனடாவை சேர்ந்த பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கத்த சக பயணிகள் அச்சமடைந்தனர். இறுதியில் அது புரளி என தெரியவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.