ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. சாலையில் தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், வாகனங்கள் அனைத்தையும் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். குறிப்பாக வாகனங்களுக்குள் உள்ள பொருட்களை கூட போலீசார் திறந்து பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.