பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியை விமானப்படை தளபதி ஏ.பி சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதியை சந்தித்த 24 மணி நேரத்திற்குள் விமானப்படை தளபதியுடனும் மோடியின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்த தொடர்ச்சியான ஆலோசனைகளின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.