ஆபரேஷன் சிந்தூர் குறித்து நட்பு நாடுகளுக்கு விளக்கமளிக்க செல்லும் எம்பிகள் குழுவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அதன் தேசிய பொதுச்செயலாளரும், ம மதாவின் நெருங்கிய உறவினருமான அபிஷேக் பானர்ஜி சேர்க்கப்பட்டுள்ளார். இந்த எம்பி குழுவில் முன்னதாக திரிணாமுல் எம்பியும் கிரிக்கெட் வீர ருமான யூசுப் பதான் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் திடீர் திருப்பமாக நேற்று அவர் தாம் விலகிக் கொள்வதாக அறிவித்தார். ம மதாவுடன் ஆலோசிக்காமல் யூசுப் பதானை நியமித்ததாகவும், கட்சித் தலைமையின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத யூசுப் பதான் குழுவில் இருந்து விலகிக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ம மதா பானர்ஜியின் அறிவுறுத்தலின் படி அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.