குரங்கம்மை வகையிலேயே மிகவும் ஆபத்தை உண்டாக்கக்கூடிய கிளேட் 1 திரிபு, இந்தியாவிலேயே முதன் முறையாக கேரள மாநிலத்தை சேர்ந்தவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டம் எடவன்னா பகுதியை சேர்ந்த 38 வயது நபர் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த நிலையில், அவருக்கு குரங்கம்மையின் கிளேட் 1 திரிபு வகை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அந்த நபருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. WHO எச்சரிக்கை விடுத்ததில் இருந்து இந்தியாவில் 30 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.