சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் இருந்து டெல்லி சென்ற விமானம் தரையிறக்கத்தின் போது குலுங்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர். டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கியபோது மழை மற்றும் புழுதிப்புயல் காரணமாக ஆட்டம் கண்டது. இதனை தொடர்ந்து விமானத்தை தரையிறக்க முடியாமல் வானிலேயே வட்டமடித்த விமானி காற்றின் வேகம் குறைந்த பின்னரே தரையிறக்கினார். மாலை 5 மணிக்கு தரையிறங்க வேண்டிய விமானம் 5 மணி 43 நிமிடத்திற்கே தரையிறக்கப்பட்டது.