சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் வாழை திரைப்படத்தின் வெற்றியினை, படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ், வாழை படம் வருமா? வராதா என்று நினைக்கவில்லை என்றும், இந்த கதையை படமாக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்பட்டதாகவும் கூறினார்.