பார்முலா 4 கார் பந்தயத்தை பார்ப்பதற்காக தமிழகம் வரும் பிரபலங்கள்* பிரபல தயாரிப்பாளர் போனி கபோரின் மகன் அர்ஜூன் போனி கபூர், நடிகர் நாகசைதன்யா, சென்னை விமான நிலையம் வருகை* தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம் நேற்று தொடங்கியது. அமைச்சர் உதயநிதி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டி நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நேற்று தீவுத்திடல் பகுதியில் பயிற்சிசுற்றுகளுடன் தொடங்கியது. தெற்கு ஆசியாவில் முதன்முறையாக நடத்தப்படும் இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயம் இதுவாகும். இந்த பந்தயத்துக்காக 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான சாலை சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்ப்பதற்காக பல பிரபலங்கள் சென்னை நோக்கி வர துவங்கியுள்ளனர் தற்சமயம் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் போனி கபூர் மற்றும் நாகசைதன்யா சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.