நாகை மீனவர்கள் 11 பேரையும் ஒரு விசைப்படகையும் சிறை பிடித்த இலங்கை கடற்படை.!இலங்கை நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 11 பேரையும் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.எல்லை தாண்டி மீன்பிடித்தாதாக கூறி காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.நாளை காலை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க முடிவு என தகவல்