தமிழகத்தில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலுக்கு இடையே பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. குறிப்பாக வால்பாறை, திருவாரூர், கொடைக்கானல், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.