தமிழ்நாட்டின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 5 மற்றும் 6 ஆம் தேதி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொருத்த வரை மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மே 3 மற்றும் 4 தேதிகளில் மன்னார் வளைகுடா பகுதியில் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்பதால், அன்றைய தினம் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.